Friday, April 8, 2011

தலையில் கல்லும்,பெரில் சாதியும்--ப்ய்ரட்சிக்கவிஞர்.

தலையில் கல் சுமத்தலும்,பெயரின் பின் சாதிசுமத்தலும் ஒன்றே-- புரட்சிக்கவிஞர்.

தமிழ்ப் புலவர் ஒருவர் புரட்சிக்கவிஞரின் ஒரு காப்பியத்தினை விளக்கினார்.
கற்பனையாக கவிஞர் மாற்று கிரகம் ஒன்றிற்குப்போகிறார். அன்கே வாழும் மனிதர்கள் யாவரும்
தமது தலையில் ஒரு பாறைக் கல்லினை சுமந்துக்கொண்டு இரு கைகளாலும் பிடித்துக்கொண்டும்
நடமாடுகிறார்கள். அவர்களிடம் இவர் "ஏன் இப்படி கல் சுமந்துக்கொண்டு அலைகிறீர்கள்" என்று
வினவினார். அதற்கு அவர்கள்" ஆகாஇது எங்கள் பாரம்பரியமானது, முன்னோர் செய்துவத்தது
புனிதமானது, கடைபிடிக்கவேண்டியது. நீங்கள் ஏன் செய்வதில்லை" என்பதாகக் கேட்டனர். அதற்குக்
கவிஞர் , " தேவை இல்லையப்பா இது இயல்புக்கு முரணனானது., அறியாமையானது,விட்டுவிடுங்கள்.
எங்களைப் போல சுமை இன்றி, கைகளை வீசி சுதந்திரமாக வாழமுடியும் . முயலுங்கள். ந்ல்வாழ்வு
வாழுங்கள்." என்பதாகச் சொன்னார். பின் அவர்கள் தலையில் இருந்த கல்லினை தூக்கி எரிந்துவிட்டு
ஒய்யாரமாக கைவீசி நடந்து மகிழ்ந்தார்கள். இப்படிச் சொல்லி , சாதியையும் நமதுமக்கள் பெயருக்குக்குப்
பின் சுமப்பதும் இதனை ஒப்பியதுதான் என்று தமிழர்களே விட்டொழியுங்கள் சாதிப்பெயர்களை என்று
அறிவுறுத்தினார்கலாம். சரியாகவே தடித்தத் தோலுக்கு ஊசியால் குத்தியுள்ளார். இதனை இன்றய
இளைஞர் சமூகம் செய்துவரும் இன்னொறு செய்கயையும் இதில் இணைத்து அடயாளப்படுத்தலாம். இன்று அறிவியல்
பெரும் சாதனைகளை, வசதிகளை, புது அறிவினை, கல்வி வாய்ப்பினைத் தந்துள்ளது. ஆனால்
மருத்துவப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், அறிவியல் பட்டங்கள், பட்டமேல் படிப்புப்
படித்தவர்கள், இன்று உலகில் எங்கும் விஞ்சி நிற்கும் தகவல் தொழில் நுட்பம் பயின்றவர்களில் ஆகிய
பலர் தமது கையில்,கழுத்தில் ஏதோ ஒரு கயிறு கட்டிக்கொண்டுத் திரிகிறார்களே ,இதனைக் கண்டாலும் .
மேற்சொன்ன கவிஞரின் கூற்றுத்தான் நினைவுக்கு வருகிறது. இவர்களின் கல்வி, உழைப்பு, நடத்தை,பொருள்
இவைகளெல்லாம் செய்யாததை இந்த அழுக்குக் கயறு செய்யும் என்று நம்புகிறார்களே .இவர்களின் மதியை
என்னவென்றுச் சொல்வது. மோதிரங்களின் நிறம் ,மேல் டுண்டுகளின் நிறம் ,இப்படி எத்தனை மூட
நம்பிக்கைகள். அந்தோ பரிதாபம் .