Thursday, September 8, 2011

அன்னாஅசாரே ரசிகர்களே காற்றில் குத்து விடாதீர்கள்.

அன்னாஅசாரே ரசிகர்களே காற்றில் குத்துவிடாதீர்கள்.
ஊழல் ஒழிப்பில் நமக்கு மறுப்பில்லை. ஆனால் நீங்கள் ஊடக ,மேல்மட்ட சாதி,வசதி கொண்டதால் நகத்தில் அழுக்குப் படாமல் கூட்டம் சேர்த்து மக்கள் பிரச்சினைகளை பிந்தல்லப்பட வக்கிறீர்கள்..
ஒரு வாய்ப்புத்தருகிகோம்.
உங்கள் ஊரில் ஒரு குழு அமைத்து, சாலைகள் போடப்படுவதை கவனியுங்கள். சாலி போட குறைந்தது ஒரு அடி சல்லி போட வேண்டும். ஆனால் ஒரே ஒரு சல்லி மட்டும் பரப்பிவிட்டு வேலை செய்வதை தடுக்க முடியுமா? அதை செய்யுங்கள்.
ஆனால் அதைப்பற்றிக் கவலை இல்லை. யாரை ஏமாற்ற்ப்பாற்கிறீர்கள்.

மாமிசம் உண்ணக்கூடாது என்றும் சாப்பிடுகிறவர்களை கட்டிவைத்து அடிக்கவேண்டும் என்றும் அன்னாஅசாரேவின் மாதிரி கிராமத்தில் உள்ளது.
இது மத வாத போக்குஅல்லவா? இதுதான் பின்னனியா? ஒரு மதவாதக் கூட்டம் சாதி நிலைக்கவேண்டும் என்று கேட்டால் செய்துவிட வேண்டுமா? ஊழல் நடக்காமல் இருக்க செய்ய வேண்டிய வேலை செய்யாமல் நடந்தபின் அவ்னை தூக்கில்போடு என்பது தூக்கை நியாயப்படுத்தத்தானே? சனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் அவரது மாதிரி கிராமத்தில்
20 ஆண்டுகளாக தேர்தல் இல்லையே ஏன்?

Wednesday, April 27, 2011

கருணாநிதியின் தகடுதித்தம்.

கருணாநிதியின் தகிடுதித்தம்.
வேறு வழி இன்றி போர்குற்றம் பற்றி பதிவு தி.மு.க.வின் புத்தகத்தில்இருக்கவேண்டுமே என்று இன்று தி.மு.க. தீர்மானம் போட்டுள்ளது.உண்மையான நிலை எடுத்திருந்தால் போராட்டம் அறிவித்திருக்கவேண்டும். தமிழகம் முனைந்தால்
இந்தியா முனைய வாய்ப்புள்ளது. கணிமொழிக்காக அல்ல கருணாநிதிக்காகவே உயர்நிலைக்கூட்டம் கூடியுள்ளது.
கருணா மீது குற்றம் சொல்வதைவிட அங்கே இருக்கும் மற்ற அரசியல்வாதிகலின் ஒழுக்கத்தில்தான் அய்யம் ஏற்படுகிறது. இன்னுமா இப்படி .இவர்களுக்கு நற்சுரணை இல்லையா? இவர்கள் வீட்டுப்பெண்கள் இவர்களை மதிக்கிறார்களா? அந்தோ பாவம் அவர்களும். அது சரி , பேட்டித்தரும் போதும் குழப்புகிறாரே பாவம். ஈழம்தான் விடிவாம். பின் சிங்களவர்களும், தமிழ்ர்களும் சரிசமமாக வாழவேண்டுமாம். எங்கே தமிழீழத்திலா? இலங்கையிலா? சோனியா நெற்றியை உயர்த்தினால் எப்படிவேண்டுமாணாலும் மாற்றிக்கொள்ளலாம் என்று தகிடுதித்தமா? சீ...சீ.

Friday, April 8, 2011

தலையில் கல்லும்,பெரில் சாதியும்--ப்ய்ரட்சிக்கவிஞர்.

தலையில் கல் சுமத்தலும்,பெயரின் பின் சாதிசுமத்தலும் ஒன்றே-- புரட்சிக்கவிஞர்.

தமிழ்ப் புலவர் ஒருவர் புரட்சிக்கவிஞரின் ஒரு காப்பியத்தினை விளக்கினார்.
கற்பனையாக கவிஞர் மாற்று கிரகம் ஒன்றிற்குப்போகிறார். அன்கே வாழும் மனிதர்கள் யாவரும்
தமது தலையில் ஒரு பாறைக் கல்லினை சுமந்துக்கொண்டு இரு கைகளாலும் பிடித்துக்கொண்டும்
நடமாடுகிறார்கள். அவர்களிடம் இவர் "ஏன் இப்படி கல் சுமந்துக்கொண்டு அலைகிறீர்கள்" என்று
வினவினார். அதற்கு அவர்கள்" ஆகாஇது எங்கள் பாரம்பரியமானது, முன்னோர் செய்துவத்தது
புனிதமானது, கடைபிடிக்கவேண்டியது. நீங்கள் ஏன் செய்வதில்லை" என்பதாகக் கேட்டனர். அதற்குக்
கவிஞர் , " தேவை இல்லையப்பா இது இயல்புக்கு முரணனானது., அறியாமையானது,விட்டுவிடுங்கள்.
எங்களைப் போல சுமை இன்றி, கைகளை வீசி சுதந்திரமாக வாழமுடியும் . முயலுங்கள். ந்ல்வாழ்வு
வாழுங்கள்." என்பதாகச் சொன்னார். பின் அவர்கள் தலையில் இருந்த கல்லினை தூக்கி எரிந்துவிட்டு
ஒய்யாரமாக கைவீசி நடந்து மகிழ்ந்தார்கள். இப்படிச் சொல்லி , சாதியையும் நமதுமக்கள் பெயருக்குக்குப்
பின் சுமப்பதும் இதனை ஒப்பியதுதான் என்று தமிழர்களே விட்டொழியுங்கள் சாதிப்பெயர்களை என்று
அறிவுறுத்தினார்கலாம். சரியாகவே தடித்தத் தோலுக்கு ஊசியால் குத்தியுள்ளார். இதனை இன்றய
இளைஞர் சமூகம் செய்துவரும் இன்னொறு செய்கயையும் இதில் இணைத்து அடயாளப்படுத்தலாம். இன்று அறிவியல்
பெரும் சாதனைகளை, வசதிகளை, புது அறிவினை, கல்வி வாய்ப்பினைத் தந்துள்ளது. ஆனால்
மருத்துவப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், அறிவியல் பட்டங்கள், பட்டமேல் படிப்புப்
படித்தவர்கள், இன்று உலகில் எங்கும் விஞ்சி நிற்கும் தகவல் தொழில் நுட்பம் பயின்றவர்களில் ஆகிய
பலர் தமது கையில்,கழுத்தில் ஏதோ ஒரு கயிறு கட்டிக்கொண்டுத் திரிகிறார்களே ,இதனைக் கண்டாலும் .
மேற்சொன்ன கவிஞரின் கூற்றுத்தான் நினைவுக்கு வருகிறது. இவர்களின் கல்வி, உழைப்பு, நடத்தை,பொருள்
இவைகளெல்லாம் செய்யாததை இந்த அழுக்குக் கயறு செய்யும் என்று நம்புகிறார்களே .இவர்களின் மதியை
என்னவென்றுச் சொல்வது. மோதிரங்களின் நிறம் ,மேல் டுண்டுகளின் நிறம் ,இப்படி எத்தனை மூட
நம்பிக்கைகள். அந்தோ பரிதாபம் .