Sunday, February 15, 2009

இலங்கையில் இனியும் தமிழர் சேர்ந்துவாழ முடியுமா?

இலங்கையில் இனியும் தமிழர் சேர்ந்துவாழ முடியுமா?

ஈழம் பண்டயக்காலத்தில் பல ஆக்கிரமிப்பாளர்களால் தொல்லைப்பட்டது. அது அப்படியே இருக்கட்டும்.
கண்காணும் காலத்தில் ஈழத்தில் தமிழ் மொழி சிங்களவர்கலால் தடுக்கப்பட்டு சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று
ஆகி கல்வியில் தமிழர் புறக்கனிக்கப்பட்டு,மலையகத்தமிழர் குடியுரிமை மறுக்கப்பட்டு, ஒட்டுமொத்த தமிழினமே இரண்டாந்திர குடிமக்களாக ஆனதன் பின் கல்வியில்,பொதுநலச்சிந்த்னையில்,மானுடயியலில் தேர்ந்த தந்தை
செல்வா முதலானோர் பாடுபட்டு,பயனற்றுப்போனதன் பின் ,இனி தாளாது என்று ஆய்ந்து முடிவெடுத்து அறப்போராட்டங்கள்,மாநாடுகள்,பொதுகூட்டங்கள்,ஊர்வளங்கள்,வின்னப்பங்கள் பல செய்தும் பயனற்றுப்போகவே
இனி பிரிந்து வழ்வது என அனைத்து தமிழ் மக்கள் விரும்பி முடிவெடுத்துப் பணியாற்றிய போது, மாநாடுகனில்
காவல்துறையைக்கொண்டு அடித்து சின்னாபின்ன்மாக்கியதோடு பல அறிஞர்கனின் உயிரையும் மாய்த்து தமிழ்
மக்கள் வழ்வில் துயரத்தை வளுக்கட்டயமாக சிங்கள அரசு திணித்ததைக் கண்ட ப் பின்னும்………
அறவழியில் உண்ணாநோண்பிருந்த மாணவிகளை ராணுவசிப்பய்கள் தூக்கிச்சென்றதை அனுபவித்த துயரை
அறிந்தப்பின்னும்……..

அதனை எதிற்கும் முகமாக இளைஞர்கள் ஒன்றுகூடி செயலாற்றும்போது அவர்களை ராணுவம் வீதிகளில்
அலைந்து வேட்டயாயியதை அறிந்தப்பின்னும்…….

கற்றறிந்த பலர் கூடி சனநாயக வழியில் பத்திக்கைகள் நடத்தியதை பொறுக்காமல் பதிரிக்கை அலுவலகங்களை
எரித்து நாசமாக்கி பலரைக் கொன்று குவித்தப் பின்னும்……..

உலகிலேயே மிக உயர்ந்த இரண்டாம் நிலையில் பொளிவோடு திகழ்ந்த அறிவுக்களஞ்ஞியமாம் யாழ்ப்பாண நூலகத்தைக்கூட எரித்து தமிழரின் அறிவுச்சுரங்கத்தைய்ம் அடயாளத்தையும் அழித்தப் பின்னும்……

அதை ஒட்டிக் கலகம் செய்து அடங்கி வாழ் அல்லது செத்துப்போ என்று கோரத்தாண்டவம் ஆடிய சிங்களரும் சிங்கள சிப்பாய்களும் ஆடியப் பின்னும்……

தம் ரத்த உறவுகள் சிதைக்கப்படுவதைப் பார்த்து சும்மா இருக்க முடியாமல் அன்றய நிலையில் ஒரு இருநூறு பேர்
சேர்ந்து ஆய்தம் ஏந்தினால்தான் மக்கலையும் மானத்தையும் காப்பற்றமுடியும் என்று முயன்ற போது ஆறு விதக்குழுக்களுக்கு பயிற்சியும் ஆய்தமும் இந்தியா கொடுத்து அதனால் அவ்வின இளைஞர்களை குறிப்பாக
விடுதலைப்புலிகலை, கொடுங்கோள் பயிற்சி பெற்று அவர்தம் குடும்பத்திற்காக கவலைப்படவேண்டாத கொலைவெறி
ஏற்றப்பட்ட இசுரேலிய “மொசாத்” கூலிப்படை கொண்டு அழிக்க சிங்கள அரசு முயன்றதற்குப் பின்னும்…..

அய்.நா அவையில் 70வதுகளில் இலங்கை அமைச்சர் பேச அழைக்கப்பட்ட போது ஒரு தமிழக் கல்விப்
பேரளர் மேடையேறி எம் தமிழினம் அழித்தொழிக்கப்படுகிறது உலக நாடுகளே கேளுங்கள் என்று கதறிக்
கைதானப் பின்னும் இன அழிப்பு நடைபெரறுவதைப் பர்த்தப் பின்னும்…….

சிங்களமே ஆட்சிமொழி என அறிவித்து இலங்கா என்று இருந்ததை சிரீ லங்கா என்று மாற்றி சிரீ என்ற ஒற்றை
எழுத்தை வீடுகளிலிலெல்லாம் எழுத்ச்சொல்லி தமிழர் நெற்றீயிலும் , சட்டைகளிலும் , சட்டையைக்கழற்றீ ஆண்கலுக்கு
முதுகிலும், பெண்கலுக்கு சட்டையைக் க்ழட்டி மார்பிலும் அடப்பாவிகளே மார்பை அறஉத்து சிரீ எழுத்தை அச்சுக் குத்தியதை கண்ட பின்னும்…..
தொடர்வ்ண்டியில் போவோரை எல்லாம் இழுத்து சிரீ குத்தி ஆடைகள் களைத்த்தைய்ம் அவிழ்த்து விட்டு மலார்
குச்சிகளால் முதுகில் அடித்து ஓடச்செய்து தமிழன் முதுகுக் காட்டி ஓடுகிறான் என்று அரக்கத்தனமாக ஊலை
விட்டு மகிழ்சிக்கூத்தாடிய பின்னும்……..

அந்தத் தொடர் வண்டியில் பயணம் செய்த புதுமணத்தம்பதிகளை ஆடை அவிழ்த்து விட்டதால் வெட்கத்தாலும் அவமானத்தாலும்
அவர்கள் குப்புறப்படுத்துவிடவே குச்சிகளால் அடித்து எழவைத்து ஓடஓட விரட்டிய அவலத்திற்க்ப் பின்னும்……..

தாம் பெற்ற பெண்டுகளை அறிவும் ஆற்றலும் பெற கல்விச்சாலைக்கு ஆசையாய் அனுப்பும் போது அவர்கள் பசியாற
டப்பாக்களில் உணவுக்குப்பதிலாக கைத்துப்பக்கியும் [துப்பக்கி வைத்திருக்க தகுதி வய்ந்தக்குடும்பம்] விஷப்புட்டியும்
போட்டுக்கொடுத்து அனுப்பி , ஆமிக்காரன் [சிங்கள சிப்பாய்] உன்னை த் தொல்லை செய்தால் சுட்டுவிடு முடியாமல் வன் புணர்சி செய்தஉவிட்டால் அந்த விந்துடன் வாராதே விடம் அருந்தி மாண்டுவிடு என்று பெற்றோரே சொல்லி தினம் தினம்
அழுது அழுது படிக்க அனுப்பிய பின்னும்…….

போராளிகளின் ஒரு குழுனினரான குட்டிமணி,ஜெகன் ஆகியோர் வெளீக்கடை சித்திரவதை முகாம் சிரைச்சாலையில்,
அதன் முன் அவர்கள்” நாஙள் இறந்தால் எங்கள் கண்களை யாருக்காவது போரறுத்துங்கள் அதன் வழியாக மலர்ந்த
தமிழீழத்தக் கணுவோம்” என்று சொல்லியிருந்தார்கள் என்பதற்காக் அவர்களின் கண்களைப் பிடுங்கி பூட்சுக் காளால்
மிதித்து நசுக்கி தண்ணீராக்கிய சிங்கள ராணுவ அட்டூழியம் அறிந்த பின்னும்…..

போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை என்று சொல்லி இந்திய ராணுவம் உள் நுழைந்தபோது நமது நாட்டின் சுதந்திரம்
வேறொரு நாட்டினால் முடிவு செய்யும் நிலை ஏற்ப்ட்டுவிட்டது எனவே நம் ம்க்களின் , போராளிகளின் பாதுகாப்பை
இந்திய அரசிடம் ஒப்புவித்து ஆய்தங்களை கீழே வைக்கிறோம் என்று தமிழ் ஈழதலைவன் பிரபாகரன் கூறியப்பின்
வானூர்தியிலிருந்து போராளீகலுக்கு யாரும் உணவோ உதவியோ செய்யக்கோடாது என்று துண்டறிக்கை விசிறியபோது
அதைக்கண்ட மக்கள் எம் பிள்ளைகளுக்கு சோறு போடாதே என்று சொல்ல இவ்ன் யார்? என்று அங்கலாய்த்தப் பின்னும்..

கலவரக்கால்ங்களில் தப்பி வர எத்தனித்த தமிழர்களில் ஈழ்த்தமிழர்களை மட்டும் தனியே இழுத்துப் போட்டு
வெட்டரிவாளால் வயிற்றை வெட்டி சரிந்த குடலுடன் பெற்றோல் ஊற்றிக்கொழுத்தியதைக் கண்டு வேலைக்குப்போன
ப்ட்டுக்கோட்டைத் தமிழன் ஒருவன் ஒரு மாதம் வாய் பேசமுடியாமல் அதிற்சியடைந்தான் என்று அறிந்தப் பின்னும்……

ராணூவப்படைகளின் டாங்கிகள் முச்சந்திகளில் போனால் கன்னிவெடி இருக்கும் என்ரு அஞ்சி அருகாமை
வீட்டு வரிசைகளீன் மீது நர நர என்று வீடுகளை நொறுக்கியவண்ணம் போய் நாசம் செய்ததைக் கண்ட பின்னும்……

இந்திய சிப்பய்கள் திரும்பும் போது தனியாக ஒரு வழியை விமானதளத்தில் ஏற்பாடு செய்ய வேண்டிய அளவு
ஈழத்தமிழர் வீட்டு மின்னியல் சாதனங்களை தூக்கி வந்ததைப் பார்த்தப் பின்னும்……

செம்மணிபுதைகுழிகளில் குழந்தைகளின் குப்பைகளை இந்த உலகம் பார்த்தப் பின்னும்……

பாதுகாப்புப்ப்குதி என அறிவித்தப் பகுதிகளில் உயிரைக் காக்க வந்த ஆதிளிகளை சுட்டுப்பொசுக்கியப் பின்னும்….

அதனை புலிகள் செய்தார்கள் என்று ராணுவம் கூறியது பொய் என்று அறிந்தப் பின்னும்……

ம்ருத்துவமனைகளில் கொத்துகுண்டுகள் போட்டு தமிழர்களை அழித்தப் பின்னும் …….

இவையும் எமது குண்டுபோட்டு தாக்கும் இலக்குகள்தாம் என்று ராணுவம் சொல்லிய பின்னும்…..

தமிழகத்தலைவர்களே, மார்க்சிஸ்ட்டுகளே, இந்திய அரசின் அதிகாரிகளே, இந்துராம்களே, சோகளே,

இதற்க்குப்பின்னும் ஒரே இலங்கை இல்ங்கை என்று வாழவெண்டும் என்கிரீர்களே இது நியாயமா, முடியுமா?

மனிதநேய ஈரச்சிந்தனையுடன் சொல்லுங்கள். முடியாது. தனித்தனி அரசாக எல்லை குறித்து வடக்கு,கிழக்கு

இணைந்து வாழவிடுவதே இந்த இன அழித்தொழித்தளின் முடிவாக இருக்கமுடியும். இது நிச்சயம்.

No comments :