Wednesday, April 1, 2009

ஈழம்-சொனியா-கலைஞருக்குக் கடிதம்.

4/1/2009. காங்கிரசு தலைவர் சோனியாஅவர்கள் இன்று தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்று
எழுதியுள்ளார். ஈழத்தமிழர்களுக்குப் பரிந்து எழுதியுள்ளார் என செய்தி வந்துள்ளது.இந்த செய்தி
அவரின் அறிக்கையாக வரவில்லை. அப்படிவந்தால்தான் அது வேலை செய்யத் தகுதியுள்ள அறிக்கையாகும். ஈழத்தமிழர்களுக்கு சமஉரிமையுள்ள அதிகாரப்பகிர்வு அளிக்க விரும்புவதாகவும்,
பென்கள், குழந்தைகள் கொல்லப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் கூரியுள்ளார். தமிழர்கள்
கொல்ல்ப்படுவது என்று சொல்லவில்லை. ஆண்கள்,இளையோர்-முதியோர் யாவரும் கொல்லப்படுவது
சரி என்கிறாரா? அது மட்டுமல்ல உடனே மு.க பாருங்கள் “சொக்கத்தங்கம்” சோனியா சொல்லிவிட்டார் தமிழினமே உயிபெற்றுவந்துவிட்டது என்று கூச்சலிடுவார் என்று அவருக்குத் தெரியும். முக வின் ஆழம் அவ்வளவுதான் என்றும் தெரியும். அது சரி இந்தச்செய்தியை சோனியா
யாருக்கு எழுத வேண்டும். கொலைவெறியன் ராசபக்சேக்கு அல்லது அய்க்கியநாடுகள் அவக்கு அல்லவா எழுத வேண்டும்? மு.க வுக்கு எழுதுவது எதற்கு? ஏமாற்றத்தானே? இதற்கெல்லாம் தமிழர்கள்
ஏமார்ந்துவிடுவார்கள் என்று அவருக்குத்தெரியுமா? அல்லது நானேஏமாற்றிக்கொள்கிரேன் என்று
வழிகிறார்களா?இது முதலைக்கண்ணீர் என்பது யாருக்குத்தான் தெரியாது. ஓட்டு வாங்கச் செய்யும்
நடிப்புத்தானே? அது போகட்டும் அங்கே மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்போகிறார்களாம்.
அதாவது மக்களின் சொந்த பூமியிலிருந்து விரட்டப்போகிறார்கள் என்பதுதானே இதன் பொருள்.மேலும்
அம்மக்களை திறந்த வெளிச் சிறைச்சாலையில் வைப்பது போலல்லவா ஆகும். அங்கே ராசபக்சே குண்டு போடமாட்டான் என்பதற்கு என்ன முகாந்திரம். போர் நிறுத்தம் வேண்டும் என்று உலகமே
கேட்கிறது. போர் நிறுத்தத்தில் எண்ணம் இருந்தால் ம்க்களை வெளியேற்ற என்ன அவசியம். ஓகோ
மு.க கேட்கவில்லை என்பதினாலா? என்ன விசித்திரமான தேசியத்தலைவர், என்ன விசித்திரமான
தமிழினத்தலைவர்,முத்தமிழ் வித்தகர், மூவேந்தர் வாரிசு கொடுமையட கொடுமை.
இன்னொறு செய்தி.திரிகோணமலையில் அமெரிக்கா படைத்தளம் வைக்கப்பார்க்கிறது. இது இந்தியாவிற்கு ஆகாது என்றுதான் ராஜிவ் காலத்தில் இலங்கைக்குப் படை சென்றது என்பதாகப்பேசப்பட்டது. இன்று மக்களைத் தானாகப் போகச் சொன்னால் போகமாட்டர்கள் என்பதால்
போர் நடத்தி பலரைக்கொன்று அந்த இடத்தைச் சுடுகாடாக்கி காலி செய்துவிட்டார்கள். இப்போது
அமெரிக்க அலுவலர்கள் திரிகோணமலையை பார்வையிட்டுப் போயுள்ளார்கள் என்ற செய்தி பரவலாகப்
பேசப்பட்டுவருகிறது. அப்படியானால் இந்தியாவின் நிலை அதோகதிதானா? உண்மை அதுவல்ல
ராஜிவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வாங்கித்தர இத்தாலியிலிருந்து யாரோ முயல்வதாக
அன்றைய செய்தித்தாள்களில் செய்தி வந்ததாக நினைவு. காசுமீர் பிரச்சனை, பஞ்சாப் பிரச்சினைகளைத் தீர்த்தாரென்றும், இலங்கைப் பிரச்சினை தீர்த்தார் என்றும் புகழ் பாடி பரிசு வாங்க முயன்றதாகத்தகவல். ஆனால் எதுவும் முடியவில்லை. ஏன் என்றால் றோ நிருவனம் போட்டுக்கொடுத்தப் பாதை இப்படியாகிவிட்டது. எம். ஜி. ஆர். உயிரோடு இருந்தால் எப்படி தேர்தலைச் சந்திப்பது, மறைந்துவிட்டால் எப்படி சந்திப்பது என்று “புளூ புக் “ என்ற
திட்டத்தைப் போட்டுக்கொடுத்தார்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் . அமைப்பின் தோழர்கள் அன்று
குடந்தைப்பகுதியில் பேசிக்கொண்டார்கள். அதனால் தானோ என்னவோ ராஜிவ் சாலையில்
இறங்கி சாதாரன எழிய மக்கள் மத்தியில் இறங்கி வந்தார் அதாவது எம்.ஜி.ஆர். போல. ஆனால்
இழப்பு ராஜிவுக்கு .இலாபம் றோ அதிகாரிகளுக்கு. எவ்வளவு திண்றிருப்பார்கள் திட்டமிட்டதற்க்காக?
ஆனால் சோனியா அவர்களே, மு.க. அவர்களே தமிழர்களைக் காப்பதாக நடிக்காதீர்கள்.
“ தன்நெஞ்சறியப் பொய்யற்க பொய்த்தப்பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்”. இது திருவள்ளுவர் சொன்னது. நிச்சயம் சுடும். தமிழர்களே ஓட்டுச்சீட்டு ஒரு நல்ல வாய்ப்பு . தவறி விடாதீர்கள். நடுநிலை வகிப்பது என்பது எதிரிக்குத் துணை போவது[பெரியார்]ஆகும். எனவே யார் வரக்கூடாது
என்று முடிவெடுத்து ராசபக்சேக்கு உதவியவர்கலையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களயும்
அதாவது காங்கிரசு, “ஒட்டுக்கங்கிரசு” களையும் தோற்கடிக்கச்செய்யுங்கள். செய்யுங்கள்.

No comments :