Sunday, September 27, 2009

வெட்கப்படுங்கள் தலைவர்களே

அண்ணா நூற்றாண்டு விழா தற்போது ஊர் தெரியக்கொண்டாடப்படுகிறது. பெரியார் தி.க. தலைவர் திரு.கொளத்தூர் மணி அவர்கள் போட்டாரே ஒரு போடு. கலைஞரின் புகழ் புராணத்தில் ஒரு ஓரத்தில்தான் அண்ணா ஒட்டிக்கொண்டு தெரிகிறார் என்று பெசியதும் பேசினார் ,அண்ணா விழா களைக்கட்டத்துவங்கிவிட்டது. இல்லையானால் அண்ணா பரிதாபத்திற்குரிய நிலை அடைந்திருப்பார்.
படித்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் ,அண்ணாவின் விழாவில் கலைஞரின் புகழைப் பாடியே யாசகப்புத்திரர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டதை நினைக்கும் போது இவர்களுக்கு வெட்கமோ ”அறிவு நாணயமோ” ஏற்ப்படவில்லை. வெட்கம் மகாவெட்கம்.
இதில் திருவாளர் வீவீவீரமணியின் நிலையோ செயலலிதா அம்மையாரை ”சேலைக்கட்டிய பெரியார்” என்று வருணித்த தன் குற்ற உணர்வை கலைஞர் பிரியர்கள், [ துணை ] முதல்வர்கள் கண்டுகொள்ளவேண்டாமே என்று மிகப்பெரிய ஜிங் ஜாங் வெட்கமில்லாமல். போடுவது வேதனை அளிக்கிறது
.
இதில் வேடிக்கை என்ன வென்றால் கலைஞர் அண்ணாவிருது பெற எத்தனைத்தகுதி உள்ளவர் என்று எடுத்துக்காட்டப் பட்டிமன்றம் வேறு நடத்தப்படுகிறது.
இது எதைக்காட்டுகிறது என்றால்கலைஞருக்கு தகுதி உள்ளதா என்ற அய்யம் வந்ததினால் அதனை ஈடுகட்ட வேண்டியுள்ளது என இவர்கள் ஒப்புக்கொள்வதாகவே இது உள்ளது. வீரமணிக்கு பெரியார் விருது. பெரியாரின்
எழுத்தும் பேச்சும் வெளிவருவதை தடுத்து தன்னை கீழ்மைப்படுத்திக்கொண்ட
இவருக்கு விருது வழங்குவது யார் என்றுப் பார்த்தால் இது தம் முதுகை தாமே தட்டிக்கொள்ளும் தற்புகழ்சியின் வெளிப்பாடுதான் இது. ஆனால்
ஒரு உண்மை சரியாக உள்ளது.அதாவது அண்ணா பெரியாருக்குத் துரோகம்
செய்துஇயக்கத்திலிருந்து வெளியேறி, தமிழகத்தின் நல்ல வளர்ச்சியைத் தடுத்துவிட்டார். இதனால்தான் அண்ணா வழிவந்து அவரையே அமுக்கி துரோகம் செய்து லச்ஜை இல்லாமல் குடும்ப த்தலவராக மட்டுமே இருக்கிறார். தமிழர்க்கு கொலைஞராக ஆகிவிட்டார். இரத்தக்கறை படிந்த தமிழ் மாநாடுநடத்துகிறார். இதுதான் மிகமிகப்
பெரிய எதிர் புரட்சியாகும். அதாவது இனத்துரோகமாகும். இவர்கள் இதற்கு
வெட்கப்படவேண்டும்.

No comments :